14939 பேராசிரியர் தனிநாயகம் அடிகளாரும் உலகத் தமிழ் ஆய்வுகளும்.

ஈழக் கவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 24 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-4676-81-7. யாழ்ப்பாணத்தில் உள்ள கரம்பனில் பிறந்த தனிநாயகம் அடிகளார் தனது ஆரம்பக் கல்வியை ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் இடைநிலைக்கல்வியை 1920 முதல் 1922 வரை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியிலும், கொழும்பில் சென்ட் பேர்னாட் செமினறியில் தத்துவவியலில் கலைமாணிப் பட்டத்தையும் (1934), தமிழ் நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப் பட்டத்தையும் M.Litt பட்டத்தையும் பின்னர் லண்டனில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். 1961 இல் மலேசியா சென்று மலாயா பல்கலைக்கழகத்தில் 1969 வரை இந்திய ஆய்வியல்துறையிலே தலைமைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பின்னர் ஓராண்டு காலம் பாரிசில் பிரான்சுக் கல்லூரியிலும், ஓராண்டு காலம் நேப்பிள்ஸ் பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றினார். கத்தோலிக்க துறவியாக தனது பணியை ஆரம்பித்த தனிநாயகம் அடிகள் தமிழை முறைப்படி கற்றுத் தேர்ந்து ஒரு தமிழ் வளர்க்கும், பரப்பும் தூதராகத் திகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது. Tamil Culture (தமிழ்க் கல்ச்சர்) என்ற ஆங்கில காலாண்டிதழை ஆரம்பித்து அதன் ஆசிரியராக 1951-1959 வரை இருந்தார். அதன் மூலம் உலகெங்குமுள்ள தமிழ், திராவிட ஆர்வலரை ஒன்று சேர்க்க முற்பட்டு பெரும் வெற்றியும் கண்டார். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுரைகளையும் நூல்களையும் எழுதி வெளியிட்டார். மலேசியாவில் பணிபுரியும் காலத்தில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நிறுவுநர்களில் ஒருவராக இருந்து செயற்பட்டார். அதன் முதல் மாநாட்டினை 1966, ஏப்ரல் 16-23 தேதிகளில் மலேசிய அரசின் துணையோடு பிரம்மாண்டமான முறையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தினார். அடிகளார் இறப்பதற்கு நான்கு மாதத்திற்கு முன்னர் ஏப்ரல் 1980 இல் தந்தை செல்வா நினைவுப் பேருரையை கொழும்பில் நிகழ்த்தினார். அதே ஆண்டு மே மாதம் வேலணையில் பண்டிதர் கா.பொ.இரத்தினம் அவர்கள் எழுதிய தமிழ்மறை விருந்து நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றார். அதன்பின், பெரிதும் உடல் நலிவுற்ற தனிநாயகம் அடிகளார், 1980 செப்டம்பர் 1 மாலை 6.30 மணியளவில் உயிர் நீத்தார். பல்கலைக்கழக தமிழ் ஆளுமைகள் தொடரில் நான்காவது நூ லாக வெளிவந்துள்ள இப்பிரசுரம், ஜீவநதி வெளியீட்டகத்தின் 107ஆவது பிரசுரமுமாகும்.

ஏனைய பதிவுகள்

14828 மாய மீட்சி.

மிலான் குந்தேரா (செக்கோஸ்லோவாக்கிய மூலம்), மணி வேலுப்பிள்ளை (தமிழாக்கம்). சென்னை 600087: வாழும் தமிழ், பிளாட் நம்பர் 44, 5ஆவது தெரு, ஓம் சக்தி நகர், வளசரவாக்கம், 1வது பதிப்பு, நவம்பர் 2009. (சென்னை

12838 – திருக்குறள்-ஒழிபியல்: பரிமேலழகர் உரை விளக்கம்.

பண்டிதமணி மு.கந்தையா. யாழ்ப்பாணம்: ஏழாலை கலாநிதி பண்டிதர் மு.கந்தையா நூல்வெளியீட்டுக் கழகம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2000. (யாழ்ப்பாணம்: சாந்தி அச்சகம்). xvi, 193 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5 x

14732 அபோபிஸ்-2036 (விஞ்ஞான நாவல்).

எம்.எஸ்.எம். ஜிப்ரி. கொழும்பு 10: எஸ். கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2011. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). (7), 8-56 பக்கம், விளக்கப்படங்கள்,

14364 அமுத மலர் 2017: யா/புங்குடுதீவு இராஜராஜேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலயம்.

மலர்க்குழு. புங்குடுதீவு: இராஜராஜேஸ்வரி தமிழ் கலவன் வித்தியாலயம், 1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: நிவாஸ் பதிப்பகம், சேர்.பொன். இராமநாதன் வீதி, திருநெல்வேலி). 106 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

14858 அல் ஜாமிஆ: மூன்றாவது இதழ்-1422/2001.

ஆசிரியர் குழு. பேருவளை: நளீமிய்யா மாணவர்களுக்கான இதழ், ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமியா, தபால் பெட்டி எண் 1, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (கல்கிஸ்சை: டெக்னோ பிரின்டர்ஸ், 7, 15A, பின்தலியா வீதி, மவுண்ட்

14813 வாக்குமூலம்.

அப்துல் றஸாக். அக்கரைப்பற்று 01: துயரி வெளியீடு, 37, பழைய பொலிஸ் நிலைய வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2005. (அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்). xii, 152 பக்கம், விலை: ரூபா