14950எங்களுடன் இன்னமும் வாழும் மாவை வரோதயன்-நினைவு மலர்.

மலர்க் குழு. கொழும்பு 6: தேசியகலை இலக்கியப் பேரவை, இல. 571×15, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5/14 சமீ. இம்மலரில் மாவை வரோதயன் பற்றிய அஞ்சலிக் குறிப்புகளை ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி, சோ.தேவராஜா, சி.சிவசேகரம், சி.கா.செந்திவேல், கோகிலா மகேந்திரன், கமலினி செல்வராசன், பொ.கோபிநாத், சுதாராஜ், வேல் அமுதன், சி.யமுனானந்தா, திருமதி பா.கணேசதுரை, குந்தவை ஆகியோரும், அஞ்சலிக் கவிதாஞ்சலிகளை ஜெயகௌரி, அருணன், சுகாபரணி, லோ.துஷிகரன், இதயராசன், இரா.சடகோபன், வசந்தி தயாபரன், பூமகன், செ.சக்திதரன், கிண்ணியா அமீர் அலி, ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஆகியோரும் வழங்கியுள்ளனர். இறுதிப் பிரிவில் மாவை வரோதயனின் சில ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. ஈழத்து எழுத்தாளரான அமரர் மாவை வரோதயன் (இயற்பெயர்: சிவகடாட்சம்பிள்ளை சத்தியகுமாரன், 12.09.1965- 2908.2009) கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எனப் பலவற்றையும் எழுதி வழங்கியவர். யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று கொழும்பில் பரீட்சைத் திணைக்களத்திலே சிலகாலம் பணிபுரிந்தார். பின்னர் அவர் சுகாதாரப் பரிசோதகராக(P.ர்.ஐ) வெலிசறையில் உள்ள மார்பு சிகிச்சை நிலையத்தில் பணியாற்றினார். சில காலம் மாவை வரோதயன் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2009,ஆகஸ்ட் 29 இல் யாழ்ப்பாணத்தில் இறந்தார். இவரது துணைவியார் ஜெயகௌரி. இவர்களுக்கு அருணன், சுகாபரணி என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54137).

ஏனைய பதிவுகள்

12901 – என் குருநாதன்.

அடியார்க்கடியன் (இயற்பெயர்: தவத்திரு சிவகுருநாதன் அடிகளார்). கொழும்பு 2: தத்துவஞானத் தவச்சாலைப் பிரசுரம், 31ஃ21, டோசன் வீதி, 1வது பதிப்பு, மே 2001. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு). xii,

Content Wager Зеркало — Альтернативный Вход На Официальный Сайт 1хбет Ввод И Вывод Средств В 1xbet Особенности И Правила Вывода Средств Из 1xbet Другие Способы

13017 ஈழநாதம்-வன்னிப் பதிப்பு: முதலாண்டு நிறைவு மலர் 1994.

மலர்ஆசிரியர் குழு. கிளிநொச்சி: ஈழநாதம் அலுவலகம், 1வது பதிப்பு, 1994. (கிளிநொச்சி: சந்திரன் பதிப்பகம்).165 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 150.00, அளவு: 23.5×18 சமீ. ஈழநாதம் நாளிதழ் 19.02.1990 யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. தனது

14988 வளம் கொழிக்க உளம் செழிக்கும் உசன் வரலாறு.

கந்தையா பேரம்பலம். மிருசுவில்: க.பேரம்பலம், சிவபுரி, உசன், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2007. (நவாலி: ஐங்கர் கிராப்பிக்ஸ்). ஒடii, 137 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ. முன்னைநாள்

12387 – சிந்தனை: மலர் 1 இதழ் 3 (ஒக்டோபர் 1967).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1967. (கண்டி: செய்தி அச்சகம், 241, கொழும்பு வீதி). (4), 65 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா

12345 – இளங்கதிர்: இதழ் 1 மலர் 3 (1950-1951).

அ.ரங்கநாதன் (இதழாசிரியர்). பேராதனை: தமிழ்ச்சங்கம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1951. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம், 194ஏ, சில்வர் ஸ்மித் வீதி). 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21ஒ14 சமீ. ‘இளங்கதிர்”