14950எங்களுடன் இன்னமும் வாழும் மாவை வரோதயன்-நினைவு மலர்.

மலர்க் குழு. கொழும்பு 6: தேசியகலை இலக்கியப் பேரவை, இல. 571×15, காலி வீதி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (அச்சக விபரம் தரப்படவில்லை). 60 பக்கம், புகைப்படம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5/14 சமீ. இம்மலரில் மாவை வரோதயன் பற்றிய அஞ்சலிக் குறிப்புகளை ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி, சோ.தேவராஜா, சி.சிவசேகரம், சி.கா.செந்திவேல், கோகிலா மகேந்திரன், கமலினி செல்வராசன், பொ.கோபிநாத், சுதாராஜ், வேல் அமுதன், சி.யமுனானந்தா, திருமதி பா.கணேசதுரை, குந்தவை ஆகியோரும், அஞ்சலிக் கவிதாஞ்சலிகளை ஜெயகௌரி, அருணன், சுகாபரணி, லோ.துஷிகரன், இதயராசன், இரா.சடகோபன், வசந்தி தயாபரன், பூமகன், செ.சக்திதரன், கிண்ணியா அமீர் அலி, ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஆகியோரும் வழங்கியுள்ளனர். இறுதிப் பிரிவில் மாவை வரோதயனின் சில ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. ஈழத்து எழுத்தாளரான அமரர் மாவை வரோதயன் (இயற்பெயர்: சிவகடாட்சம்பிள்ளை சத்தியகுமாரன், 12.09.1965- 2908.2009) கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாடகங்கள் எனப் பலவற்றையும் எழுதி வழங்கியவர். யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியில் பயின்று கொழும்பில் பரீட்சைத் திணைக்களத்திலே சிலகாலம் பணிபுரிந்தார். பின்னர் அவர் சுகாதாரப் பரிசோதகராக(P.ர்.ஐ) வெலிசறையில் உள்ள மார்பு சிகிச்சை நிலையத்தில் பணியாற்றினார். சில காலம் மாவை வரோதயன் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 2009,ஆகஸ்ட் 29 இல் யாழ்ப்பாணத்தில் இறந்தார். இவரது துணைவியார் ஜெயகௌரி. இவர்களுக்கு அருணன், சுகாபரணி என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54137).

ஏனைய பதிவுகள்

Bugs and Bees online vortragen

Content Mr BET App Apple | Freispiele obsiegen und für nüsse Bares hinunterschlucken Bugs’stickstoffgas Bees Bugs’stickstoffgas Bees kostenlos vortragen Bugs and Bees Für nüsse Geben

Aprovecha Las Bonos Poker Sin Tanque

Content Para Los primero es antes Se Recomiendan Las Casinos Online, Actualmente Cualquiera Puede Transformarse En Jugador De Casino | danger high voltage 120 giros