14956 பன்மொழிப் புலவரின் ஆய்வுகள். நினைவு மலர்க் குழு.

யாழ்ப்பாணம்: பன்மொழிப்புலவர் தம்பு கனகரத்தினம் நினைவுக் குழு, மயிலங்கூடலூர், 1வது பதிப்பு, மார்ச் 2013. (கொழும்பு 6: குளோபல் கிராப்பிக்ஸ், இல. 14, கொழும்புத் தமிழ்ச் சங்க ஒழுங்கை, வெள்ளவத்தை). (6), 101 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15 சமீ. மயிலங்கூடலூர் பன்மொழிப் புலவர் அமரர் தம்பு கனகரத்தினம் (09.04.1927- 18.02.2013) அவர்களின் நினைவு மலர். பேராசிரியர் சபா.ஜெயராசாவின் அணிந்துரையுடன் கூடிய இம்மலரில் பன்மொழிப் புலவரின் வாழ்க்கை வரலாறு (சி.அப்புத்துரை), புத்த மதத்தில் இந்து தத்துவங்கள் (த.கனகரத்தினம்), வீர சோழியத்தின் சார்புநூல் தானா சிங்கள இலக்கண நூலான ‘சிதத்சங்கராவ”? (த.கனகரத்தினம்), சிலப்பதிகாரமும் ஈழமும் (த.கனகரத்தினம்), தமிழ் சிங்கள தூது காவியங்கள் (த.கனகரத்தினம்), பன்மொழிப் புலவர் பற்றிய பல்துறை அறிஞர்கள் பார்வை ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 53554).

ஏனைய பதிவுகள்

9892 தமிழீழ ஈகச்சுடர் அன்னை பூபதி.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத் தொடர்பகம், 1வது பதிப்பு, 1992. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம், மகேந்திரா வீதி). 48 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×12.5 சமீ. மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும்

12960 – பிரித்தானியாவின் புதிய அடிப்படை வரலாறு: இரண்டாம் பகுதி 1485-1688.

யொட்சு தவுன்சென் உவாணர், சி.என்றி கே. மாட்டின், டி.எசுகின் மூர் (ஆங்கில மூலம்). சோ.நடராசா (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, அரச கரும மொழித் திணைக்களம், 1வது பதிப்பு, 1961. (கொழும்பு: இலங்கை