15126 திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் புராணம்.

ஆறுமுக நாவலர். கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சு, 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

vi, 78பக்கம், விலை: ரூபா 120.00, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-9233-94-7.

தெய்வப் புலவர் சேக்கிழார் சுவாமிகள் பாடிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரியபுராணம் சைவ சமயத்துக்குக் கிடைத்த அரும்பெருஞ் சொத்தாகும். தமிழ் நாட்டில் வாழ்ந்து ஞானம் பெற்றுச் செயற்கரிய செய்த சைவப் பெரியார்களின் உண்மை வரலாற்றைக் கூறும் நூல் இது. சேக்கிழார் சுவாமிகள் பெரிய புராணத்தைச் செய்யுள் வடிவிற் பாடியுள்ளார். செய்யுளை எல்லோரும் விளங்கிக் கொள்ளமாட்டார்கள் எனக் கருதிய நாவலர் பெருமான் அதை வசன நடையில் பெரியபுராண வசனம் என எழுதி வழங்கியுள்ளார். இந்நூல் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் வரலாற்றைச் சேக்கிழார் செய்யுள் நடையிற் சொல்லிய செய்திகள் எல்லாவற்றையும் வசன நடையில் நாவலர் எழுதியதன் மீள்பதிப்பாகும்.

ஏனைய பதிவுகள்

Internet poker Web sites

Posts Which Online casino Software Pay Real money? Report on Our Greatest A real income United states Gambling enterprises Finest United states Gambling games Professionals