மௌனாசிரம். கரவெட்டி: வீ.எஸ்.தாமோதரம்பிள்ளை குடும்பத்தினர், பழமுதிர்ச்சோலை, கருணைவாய் மேற்கு, 1வது பதிப்பு, ஜனவரி 2004. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48 B, புளுமெண்டால் வீதி).
(12), 167 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.
பொறியியலாளர் அமரர் தாமோதரம்பிள்ளை கிருபாகரன் அவர்களின் நினைவான வெளியிடப்பட்ட நினைவுமலர். இதில் விநாயகர் துதி (விநாயகர் அகவல், விநாயகர் நாமாவளி, பிள்ளையார் கதை), முருகன் துதி (கந்த சஷ்டி கவசங்கள்: 1வது கவசம் திருப்பரங்குன்றம், 2வது கவசம் திருச்செந்தூர், 3வது கவசம் பழனிமலை, 4ஆவது கவசம் சுவாமிமலை, 5ஆவது கவசம் திருத்தணிகை, 6ஆவது கவசம் பழமுதிர்ச்சோலை, முருகன் நாமாவளி, திருப்புகழ்), விஷ்ணு துதி, சக்தி துதி (அபிராமி அந்தாதி, கௌரிகாப்பு, சக்தி கவசம்), சிவ துதி (முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம், ஏழாம் திருமுறைகள்), எட்டாம் திருமுறை (சிவபுராணம், திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, திருப்பொற்சுண்ணம், ஏனைய பாடல்கள்), ஒன்பதாம், பத்தாம், பதினொராம், பன்னிரண்டாம் திருமுறைகள், ஆஞ்சநேயர் துதி, மங்களம் ஆகிய தலைப்புக்களின் கீழ் பக்திப் பாசுரங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 75191).