அமுதா அன்பழகன், மனோன்மணி சண்முகதாஸ் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, இல. 90, ஞானவைரவர் வீதி, கோண்டாவில், 1வது பதிப்பு, ஐப்பசி 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
vi, 46 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 16.5×12 சமீ., ISBN: 978-955-43934-1-7.
குழந்தைகளுக்கு இயல்பாகவே மனப்பழக்கம் உண்டு. இவர்கள் இயல்பாகவே பொழுதுபோக்கு வேளைகளில் மனப் பயிற்சி பெறுகிறார்கள். இந்நிலையில் வினாக்களைக் கேட்டு விடை கூறலும் ஒரு பொழுதுபோக்காக இருந்துள்ளது. கேட்கின்ற வினாவிலேயே மறைவாய் விடையும் அமைவது ஒரு சிறப்பு. அதனால் இந்த அமைப்பு விடுகதை என அழைக்கப்படுகின்றது. விடுகதைகள் மக்களின் இயல்பான மனப்பாங்கையே அடிப்படையாகக் கொண்டமைவதால் எல்லோருமே விடையளிக்க முடியும். ஒரு நாட்டின் இயற்கை நிலையையும் பண்பாட்டு நிலையையும் ஏனையோர் அறிய விடுகதைகள் பெரிதும் துணை செய்யும். இந்நூலில் இத்தகைய விடுகதைகள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.