இரா.நிஷாந்தன். கிளிநொச்சி: இரா.நிஷாந்தன், ஆசிரியர், கிளி/இராமநாதபுரம் மகா வித்தியாலயம், 1வது பதிப்பு, தை 2019. (மீசாலை: சக்தி பதிப்பகம், ஏகாம்பரம் வீதி, மீசாலை கிழக்கு).
256 பக்கம், விலை: ரூபா 300.00, அளவு: 20.5×14.5 சமீ.
இரு பிரிவுகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்நூலின் முதலாம் பிரிவில் தரம் 10இற்குரிய பாடத்திட்டத்திற்கமைவாக நீதிப் பாடல்கள், நாவலர் எழுந்தார்-கட்டுரை, பாரதியார் சுயசரிதை, தனிப்பாடல்கள், கம்பியூட்டர்-சிறுகதை, திருக்குற்றாலக் குறவஞ்சி, நாட்டார் பாடல்கள், கம்பராமாயணம் (குகப் படலம்), எது நல்ல சினிமா-கட்டுரை ஆகிய ஒன்பது பாடங்களும் பின்னிணைப்பாக, முதலாம், இரண்டாம், மூன்றாம் தவணைகளுக்குரிய வினாத்தாள்களும் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பிரிவில் தரம் 11இற்குரிய பாடத்திட்டத்திற்கமைவாக திருக்குறள்-பேதைமை, சங்கப் பாடல்கள், இலக்கியமும் சமநோக்கும்-கட்டுரை, மூத்தம்மா-சிறுகதை, தற்காலக் கவிதைகள், அற்றைத் திங்கள்-நாடகம், மகாபாரதம்) கிருஷ்ணன் தூதுச் சருக்கம்), தத்தை விடுதூது-கவிதை, தமிழ்ப் பண்பாடு-கட்டுரை ஆகிய ஒன்பது பாடங்களும், பின்னிணைப்பாக, முதலாம், இரண்டாம், மூன்றாம் தவணைகளுக்குரிய வினாத்தாள்களும் தரப்பட்டுள்ளன.