15496 உன்னோடு வந்த மழை.

மருதமுனை விஜிலி (இயற்பெயர்: மொஹமட் மூசா விஜிலி). மருதமுனை 4: ‘அலிஸ்’ ஊடக கலை இலக்கிய சமூக சேவை வலையமைப்பு, 121, மரிக்கார் வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2017. (சாய்ந்தமருது: எக்செலன்ட் பிரின்ட்).

xxiii, 84 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 23×16 சமீ., ISBN: 978-955-43918-0-2.

இத்தொகுப்பில் எனது மண், வாலிபத்திற்கான மனு, கோடை விரித்த வலை, பேய்கள் ஆடிய நடனம், திடல், உன்னோடு வந்த மழை, காட்டில் புதைக்கப்பட்ட கவிதை, மாமிகளின் கனவு, நேற்றைய என் பேருந்துப் பயணம், எனது தெரு, நீ ஒரு சுயநலக்காரி, கடல் விழுங்கிய கதை, பறைசாற்றுதல், தண்டச்சோறு, வெட்கமில்லாத மனிதன், நீர், சுருங்கும் இரவுகள், நீ தந்த சுவாசம், மணல் முகட்டு ரகசியங்கள், தூரத்தில் அசையும் நிலவு, நெருப்பு தேசம், வெற்றுடல், நிழல் அசைதல், மனிதச் சித்திரங்கள், நிலா ஒப்பாரி, சிறை மீட்புக்கான முறையீடுகள், அந்நியம், என் நாட்குறிப்பு, தாய்மையின் வடிவம், செங்குத்தான பயணிப்புகள், மரணம், அகதிகள், ஏழு வெள்ளம், பேசாத பந்துகள், பொறி, அஸ்தமனம், சுயம், மூடப்படும் வாசல்கள், செத்துப்போன நினைவுகள், நேற்றைய இரவு, பிரகடனம், வானவெளி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட விஜிலியின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. விஜிலியின் பெரும்பாலான கவிதைகள் அவர் வாழ்ந்த காலத்தை மிக அற்புதமாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவரது கவிதைகளின் ஒவ்வொரு பக்கங்களும் அந்தக் காலத்தின் அவஸ்தையை வெளிப்படுத்துவனவாகவே அமைந்துள்ளன. இவரின் கவிதைகளில் சரளமான மொழி, வீச்சு, புரிதலுக்கான தலைப்பு, உடைவில்லாத ஓட்டம், நகைச்சுவை என எல்லாமே கலந்து ஊடாடுகின்றன. கவிஞர் விஜிலி, அம்பாரை மாவட்டத்தில் மருதமுனை மண்ணில் பிறந்தவர்.

ஏனைய பதிவுகள்

Αυξήστε την εμπειρία παιχνιδιού σας: Leonbets Android OS App Wagering & Gambling Games παντού, κάθε φορά

Με ένα μεγάλο λογαριασμό Leonbet, μπορείτε να απολαύσετε αβίασες, γρήγορες καταθέσεις και αποσύρσεις και μπορείτε να ανταποκριθείτε στις ανταμοιβές των ζωντανών παιχνιδιών. Ποια αναθεώρηση βυθίζεται