மு.கீர்த்தியன். நுவர எலிய: பெருவிரல் கலை இலக்கிய இயக்கம், கொட்டகல தமிழ்ச்சங்கம், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
78 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-35631-0-1.
கவிஞர்களுக்கு மழை ஒரு நல்ல குறியீடு. அது பசுமை, வளம் போன்றவற்றைக் குறிக்கிறது. அது கோடை, வரட்சி என்பவற்றுக்கு எதிரானது. ‘உள் நனைதல்’ என்ற கவிதை மலையகக் கவிஞர் மு.கீர்த்தியனின் இத்தொகுப்பின் முதல் கவிதையாகும். இது மழை பற்றியது. எனினும் மழை என்ற இயற்கை நிகழ்வு பற்றியதல்ல. வாழ்க்கையின் மலர்ச்சி பற்றியது. பசுமையின் வருகை பற்றியது. வரட்சியின் நீக்கம் பற்றியது. நம் நெஞ்சை ஈரமாக்குவது பற்றியது.