15579 பேனையை கீழே வைத்துவிடாதே.

மொழிவரதன் (இயற்பெயர்: கருப்பையா மகாலிங்கம்). கொட்டகலை: கொட்டகலை தமிழ்ச் சங்கம், 34/20, மொழி அகம், கணபதிபுரம், 1வது பதிப்பு, நவம்பர் 2020. (நுவரஎலிய: யுனிவர்சல் அச்சகம், ஹட்டன்).

x, 120 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14.5 சமீ.

1970களில் கண்டி கலை இலக்கிய வட்டத்தின் தீவிர பங்காளியாக இருந்து மலையக இலக்கிய உலகில் பெரிதும் அறியப்பெற்ற கலாபூஷணம் க.மகாலிங்கம் (மொழிவரதன்) அவர்களின் தேர்ந்த கவிதைகளின் தொகுப்பு இதுவாகும். நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டதும் 1970-2020 காலகட்டத்தில் எழுதப்பட்டதுமான இவரது கவிதைகள் இலங்கையின் கடந்த ஐம்பது வருடகால மலையக இலக்கியங்களின் பேசுபொருள் குறித்தும் இலக்கியப் போக்குகள் குறித்தும் உரையாடுவதற்கு பொருத்தமான வளங்களைக் கொண்டுள்ளன. இவர் ஆலி எல முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் பதுளை தேசிய கல்லூரியிலும் கல்வி கற்றவர். பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், ஆசிரியராக, அதிபராக, கல்வி அதிகாரியாக எனத் தன் தொழில்துறையில் நிலையுயர்வுகளைக் கண்டவர்.

ஏனைய பதிவுகள்