15839 நயம்பட … படைப்பு-படைப்பாளி-படிப்பு.

இ.இராஜேஸ்கண்ணன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

(6), 133 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-0958-48-1.

வதிரியூர் இ.இராஜேஸ்கண்ணன் அவர்கள் எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு. சமூக வரலாற்றாசிரியனாக நாவலாசிரியன்: தெணியானின் நாவல்களை முன்வைத்த புரிதல், சமூக மாற்றத்தை மிருதுவாக வெளிப்படுத்தும் சமூக வரலாற்று ஆவணப் பதிவாக குதிரை வாகனம், புரை தீர்ந்த நன்மை பயக்குமெனில்: ஞானம் பாலச்சந்திரனின் பொய்மையும் வாய்மையிடத்து நாவல் குறித்த ஒரு பார்வை, கலையழகோடு இயைந்த சமூக நோக்கெனும் படைப்புப் பக்குவம்: சட்டநாதனின் சிறுகதைகளை முன்வைத்த ஒரு தேடல், விரியத் துடிக்கும் சமூக பண்பாட்டு வரலாற்றுப் பதிவகளாய் தெணியானின் சிறுகதைகள்: மாத்துவேட்டி குறித்தான ஒரு பார்வை, நலிந்தோரின் ஏழைக் குரலாயும் எழுவோரின் புரட்சிக் குரலாயும் நீரில் கிழித்த கோடுகள்: கே.ஆர். டேவிட்டின் எழுபதுகளின் சிறுகதைகளை முன்வைத்த ஒரு பார்வை, உடுவில் அரவிந்தனின் பாழ்வெளி: மிருதுவாய் தூண்டும் மொழியின் வழி பின்னைப் போர்க்காலப் பிரதிபலிப்புகள், வாசக சினேகமான படைப்புகள்: க.பரணீதரனின் அல்வாய்ச் சண்டியன் சிறுகதைத் தொகுதிக்கான ஓர் அறிமுகம், படைப்பாக்க சிரத்தைமிக்க சிறுகதைப் படைப்பாளி புலோலியூர் ஆ.இரத்தினவேலோன், பால்நிலை பாரபட்சத்தில் புலனாகாப் பண்பாட்டின் செல்வாக்கு: நிரூபாவின் சுணைக்கிது சிறுகதைத் தொகுதியை முன்வைத்த தேடல், நிகழ்விய வெளிப்பாட்டின் பிரதிபலிப்பு எழுத்தாக நாட்குறிப்பு எழுதலின் சுயசரிதைப் பாணி: அஜந்தகுமாரின் இனிப்புக் கதைகளை முன்வைத்த ஓர் அடையாளப்படுத்தல், அமைப்பாக்கலைக் கேள்விக்குள்ளாக்கும் படைப்புநெறி: மயூரரூபனின் புனைவின் நிழல் குறித்த புரிதல், மரபுநிலைப்பட்ட கவிஞன் ஒருவனின் புதுக்கவிதைப் பரிமாணம்: த.ஜெயசீலனின் ‘புயல் மழைக்குப் பின்னான பொழுது’ கவிதைத் தொகுதியை முன்வைத்த ஒரு பார்வை, வாழ்வியல் முரண்களால் பேதலிக்கும் வரிகள்: இதயராசனின் நானும் என் தேவதையும் பற்றிய ஒரு வாசக அனுபவம், மூத்தோரின் உலகம் பற்றிய சிறுவர்களின் விமர்சனமான வாழத்துடிக்கும் வடலிகள் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இது 160ஆவது ஜீவநதி வெளியீடாகும்.

ஏனைய பதிவுகள்

15710 சுருதி மாறிய புல்லாங்குழல்.

தேனூர் கௌசிகன் (இயற்பெயர்: கந்தசாமி கௌசிகன்). மட்டக்களப்பு: வெளியீட்டுக் கழகம், தேனூர் தமிழ்ச் சங்கம், தேற்றாத்தீவு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (வவுனியா: ஓல் இன் வன் அச்சகம்). (14), 77 பக்கம், சித்திரங்கள்,

Awesome Dish Odds

Blogs Dota 2 bet advice – Understanding Gaming Range Way Team Nomination Opportunity How will you Placed on A spread Within the Trading? Steps to