15925 இருபாங்குக் கூத்துக் கலைஞன் எஸ்.ஈ.கணபதிப்பிள்ளை அவர்களின் கலையும் பணியும்.

ஜி.கே.கோபாலசிங்கம், ஈழத்துப் பூராடனார்.  கனடா: ஜீவா பதிப்பகம், 1109 Bay Street, Toronto, Ontario M5S 2B3, 1வது பதிப்பு, ஆவணி 1999. (கனடா: ரிப்ளெக்ஸ் அச்சகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2B3).

xiv, 34 பக்கம், புகைப்படங்கள், விலை: கனேடிய டொலர் 3.00, அளவு: 21×14சமீ.

5.10.1964இல் மறைந்த இருபாங்குக் கூத்துக் கலைஞன் எஸ்.ஈ.கணபதிப்பிள்ளை அவர்களின் கலை வாழ்வும் பணிகளும் இந்நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. 2.7.1957 முதல் 6.6.1964 வரை ஏழு வருடங்கள் இலங்கை வானொலியில் 100க்கு மேற்பட்ட கலை நிகழ்ச்சிகளைத் தயாரித்தும் அவற்றில் பங்கேற்றும் வந்த கலைஞர் இவர். புலந்திரன் தூது (தென்மோடிக் கூத்து), சராசந்தன் (வடமோடிக் கூத்து), சந்தனு மகராசன் (தென்மோடிக் கூத்து), கமசன் வதம் (வடமோடிக் கூத்து), பாசுபதம் (வடமோடிக் கூத்து), ஆகிய ஐந்து முழு இரவுக் கூத்துகளையும் இவர் பாடி அளித்துள்ளார். (இந்நூல் மட்டக்களப்பு பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 2348). 

ஏனைய பதிவுகள்