தம்பிப்பிள்ளை சிவப்பிரகாசம். கொழும்பு 6: த.சிவப்பிரகாசம், 44/4, 4/2, தர்மராம வீதி, வெள்ளவத்தை, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (அச்சக விபரம் தரப்படவில்லை).
40 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20×14.5 சமீ.
அகவாசனை, என்னில் தெளிந்த எண்ணங்கள், கலியுகம், கணப்பொழுதின் மகிமை, தர்ம யுத்தம், வாழ்க்கை வாழ்வதற்கே, வரிசையை முறிக்கலாமா?, சுகவாழ்விற்கு எளிமையான எண்ணங்கள், சிந்தித்து செயற்படத் தூண்டும் திவ்விய வாக்கியங்கள், சிந்திப்போமா ஆகிய மனித மேம்பாட்டு நூல்களை எழுதியுள்ள திரு. த.சிவப்பிரகாசம், அதன் தொடர்ச்சியாக சும்மா இரு என்ற சிவயோக சுவாமிகளின்ஆன்மீக விழிப்புணர்வு மிக்க பல்வேறு கருத்துக்களை விதந்து போற்றும் இந்நூலை எழுதியுள்ளார்.