ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா. கனடா: வடலி வெளியீடு, 35, Long meadow Road, Brampton, Ontario, L6P 2B1, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).
87 பக்கம், விலை: 12 கனேடிய டொலர், அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-1-7752392-1-5.
தாயைப் போல பிள்ளை, கோபம்- இது ஆணுக்கு மட்டும் சொந்தமானதா?, ஒற்றைப் பெற்றோரியம், பிள்ளை வளர்ப்பில் வன்முறை, கலாசாரம் அழிந்து போகிறதா?, இது பலமா அல்லது பலவீனமா?, அடாவடித்தனம், எங்கே நாம் நிற்கிறோம்?, சிறு பிள்ளைகளுக்குப் புரியும்படி பேசுவோம், சுயமதிப்பு, புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை, புலம்பெயர் வாழ்வில் கண்ணகியும் மாதவியும், சுதந்திரமும் நாமும், உள்ளொன்று வைத்துப் புறமொன்று, பெண்களும் மனநலமும், பெற்றோருக்கும் இளையோருக்கும் இடையிலிருக்கும் இடைவெளி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 16 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. ஸ்ரீரஞ்சனியின் கட்டுரைகள் யாவும் சமகாலச் சமூகத்தின் கரிசனைக்குரிய விடயங்களை அலசுகின்றன. எமது தமிழ்ச் சமூகம் தாயகத்திலும் புலப்பெயர்விலும் எதிர்கொள்ளும் சவால்கள், அனுபவங்கள், காயங்கள் உட்பட அனைத்திற்கும் உளவியல் ரீதியில் தனது தரப்பு சிந்தனையை ஆசிரியர் முன்வைக்கிறார்.