வி.செல்வரத்தினம் (தொகுப்பாசிரியர்). வட்டுக்கோட்டை: திருமதி செல்வரத்தினம் கௌரி, அப்புக்காத்து வளவு, அராலி மத்தி, 1வது பதிப்பு, மார்கழி 2019. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ்.பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).
76 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 15.5×11.5 சமீ., ISBN: 978-955-38168-4-9.
இந்நூல் அளவில் சிறியதாயினும், வாழ்க்கையில் மக்களுக்குத் தேவையான சகல துறைகளையும் எடுத்துக்காட்டி அறிவுறுத்துகின்றது. ஆன்மீகப் பெரியார்களின் பொன்மொழிகள் அவர்கள் ஆய்ந்து அறிந்து மக்களுக்குச் சொல்லும் அருளுரைகள் ஆகியவற்றைப் படிப்பதன் மூலம் ஏற்படுகின்ற மாற்றம் வாழ்வைச் செழுமைப்படுத்த உதவும் என்ற ஆசிரியரின் கருத்திற்கு அமைவாக அவரால் தொகுக்கப்பெற்ற 366 பொன்மொழிகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.