16063 சிவஞானபோதச் சிற்றுரை : எளிய நடையில் எழுதப்பட்டது.

மட்டுவில் ஆ.நடராசா. கொழும்பு 6: மட்டுவில் ஆ.நடராசா, 25, 1/1 ஈ.எஸ்.பெர்ணாண்டோ மாவத்தை, 1வது பதிப்பு, 2008. (கொழும்பு 6: டெக்னோ பிரின்ட், 55 டாக்டர் ஈ.ஏ. குரே மாவத்தை).  

304 பக்கம், விலை: ரூபா 400., அளவு:  23×15.5 சமீ., ISBN: 978-955-99808-1-0.

புறச்சந்தான பரம்பரையின் முதல்வர் மெய்கண்டதேவ நாயனார் அருளியதே சிவஞானபோதமாகும். இது நந்தியெம் பெருமானுக்கு ஆகமங்கள் கூறும் பொருள் வேற்றுமை பற்றி ஐயமுண்டானபோது, அதை நீக்குவதற்குச் சிவபெருமானால் உபதேசிக்கப்பட்டதாகக் கூறுவர். சீகண்ட உருத்திரரிடம் சிவஞான போதத்தைக் கேட்டருளிய நந்திபெருமான், அதனை சனற்குமார முனிவருக்கும் சனற்குமாரர் சத்தியஞான தரிசனிகளுக்கும் சத்தியஞான தரிசனிகள் பரஞ்சோதி முனிவருக்கும் அருளிச்செய்தனர் என்பது ஐதீகம். பரஞ்சோதி முனிவர் சாமுசித்தராய் அவதரித்த திருவெண்ணெய் நல்லூரில், தன் மாமனார் வீட்டில் வீற்றிருந்த மெய்கண்ட தேவரிடம் வந்து சத்தியஞான தரிசனிகளிடம் தாம் கேட்டவாறு இந்நூலை மெய்கண்ட தேவருக்கு உபதேசித்தார் என்பர். மெய்கண்டார் சிவஞானபோதத்திலுள்ள பன்னிரு சூத்திரங்களையும் தமிழில் மொழிபெயர்த்து, அதற்குக் கருத்துரை, ஏது, திருட்டாந்தம் (உதாரணம்) முதலியவற்றோடு கூடிய வார்த்திகப் பொழிப்புரையும் செய்து அருளியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 46155).

ஏனைய பதிவுகள்

12465 – கொழும்பு இந்துக்கலூரி : முகத்துவாரம் வெள்ளிவிழா மலர் 2002.

எஸ். டபிள்யூ.ஜோர்ஜ் (இதழாசிரியர்). கொழும்பு: கொழும்பு இந்துக் கல்லூரி, முகத்துவாரம், 1வது பதிப்பு, 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). xxix, 64 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: