16098 நல்லைக்குமரன் மலர் 1996.

தெல்லியூர் செ.நடராசா (கௌரவ பதிப்பாசிரியர்), நல்லையா விஜயசுந்தரம் (உதவிப் பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 1996. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி).

114 + (6) பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25.5×18.5 சமீ.

நல்லூர் கந்தசுவாமி கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் வெளியிடப்படும் இம்மலர், 1996ஆம் ஆண்டு நல்லூர்த் திருவிழாவின்போது வெளிவந்துள்ளது. ஆசிச்செய்திகள், வாழ்த்துச் செய்திகள் ஆகியவற்றுடன் மனத்தூய்மை வேண்டும், உதவிப் பதிப்பாசிரியரின் உள்ளத்திலிருந்து …., செய்நன்றியாகச் சிறியோம் செய்யத்தக்கது உண்டோ! (க.கனகராசா), நல்லூரான் தந்ததும் கொண்டதும் (நா.க.சண்முகநாதபிள்ளை), கந்தபுராண படனம் (பொ.சிவப்பிரகாசம்), கந்தனின் கருணைத் தூது (ஆறு. திருமுருகன்), நல்லைக் குகவேள் (ச.தங்கமாமயிலோன்), நல்லைக் குமரன் – எங்கள் குலதெய்வம் (மானிப்பாயூர் வே.க.இரத்தினசிங்கம்), உதித்தனன் உலகம் உய்ய (கோ.சி.வேலாயுதம்), கும்பாபிஷேக மகத்துவம் (சிவஸ்ரீ பால வைத்தியநாத சிவாசாரியார்), செவ்வேள் அருளும் திருப்பரங்குன்றம் (காரை. செ.சுந்தரம்பிள்ளை), இந்துமதம் காட்டும் இறைவழிபாடு (நல்லையா விஜயசுந்தரம்), சிந்தனைக்கு (க.சிவராமலிங்கம்), இரத்தினமும் முத்தும் (க.சொக்கலிங்கம்), ஞானமே உருவாகிய முருகன் (ப.கோபாலகிருஷ்ணன்), முருகனின் ஆறுமுகங்கள் (அ.சண்முகதாஸ்), நல்லைக்கு ஓர் புனித நகர் (செ.பாலச்சந்திரன்), யாழ்ப்பாணக் குடா நாடும் முருக வழிபாடும் (வி.சிவசாமி), இறையியலும் இளைஞரும் (சி.மகேசன்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரை அலங்கரித்துள்ளன.

ஏனைய பதிவுகள்