16338 இயற்கை வழி.

செல்வி அ.ஆர்த்திகா (தொகுப்பாளர்). யாழ்ப்பாணம்: இயற்கை வழிச் செயற்பாட்டாளர்கள், எழுதிரள், 209, பலாலி வீதி, கோண்டாவில், 1வது பதிப்பு, நவம்பர் 2021. (அச்சக விபரம் தரப்படவில்லை).

52 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14 சமீ.

ஜேர்மன் தூதராலயத்தின் அனுசரணையுடன் Schock-Familien-Stiftung கூட்டுறவில் தயாரித்து விநியோகிக்கப்பட்ட வண்ண விளக்கப்படங்களுடனான கைந்நூல் இது. இதில் இயற்கைவழி விவசாயத்தின் அடிப்படை விடயங்கள், விதைச் சிகிச்சை, பாதுகாக்கப்பட்ட நாற்றுமேடை, சிறுதுண்ட நாற்றுமேடை, நடுகைக்குழி தயார் செய்தல், பூச்சாடிகளில் நடல், விதை/நாற்றுக்களை நடல், நீர்ப்பாசனம், மூடுபடை, சேதனப் பசளைகள், களைகளைக் கட்டுப்படுத்தல், உயிர்க் கரி, நோய்கள், பீடைகள் கட்டுப்பாடு (முக்கியமான மரக்கறிப் பயிர்கள்), மண் தொற்று நீக்கல், விதை/நாற்றுக்களை நேர்த்தி செய்தல், கட்டுப்பாட்டு முறைகள் ஆகிய தலைப்புகளின் கீழ் இயற்கை வழி விவசாய முறைகள் இங்கு விளக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்