பாரதி சிவயோகநாதன். மொரட்டுவை: திருமதி பாரதி சிவயோகநாதன், எஸ். 2/6, சொய்சாபுர தொடர்மாடி, 3வது பதிப்பு, ஜனவரி 2020, 1வது பதிப்பு, மே 2017, 2வது பதிப்பு, ஜீலை 2018. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
100 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 25.5×16.5 சமீ.
தரம்-1 முதல் தரம்-3 வரை வட இலங்கைச் சங்கீத சபைப் பாடத்திட்டத்திற்கு அமைவாக பந்தனை நல்லூர் பாணியில் எழுதப்பட்ட நூல். நூலாசிரியை கொழும்பு கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகப் பணிபுரிகிறார். மூன்று தரங்களுக்குமான பாடநெறிகள் செய்முறை, அறிமுறை ஆகிய இரு பிரிவுகளின் கீழ் தனித்தனியாக விளக்கப்பட்டுள்ளன.