16375 ஆற்றுகை 12-நாடக அரங்கியலுக்கான இதழ் : களம் 10, காட்சி 12, டிசம்பர் 2004.

ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர்;, 28, மாட்டின் வீதி).

80 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 40.00, அளவு: 20.5×14.5 சமீ.

திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். ஆசிரியர் குழுவில் யோ.யோண்சன் ராஜ்குமார், கி.செல்மர் எமில், வை.வைதேகி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில், கூத்தரங்கின் புத்துருவாக்கம்: சுதேச நவீனவாதத்தின் திறவுகோல் (சி.ஜெயசங்கர்), நாட்டுக்கூத்து மறுமலர்ச்சி: சில அவதானிப்புகள் (முல்லைமணி), யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக்கூத்து மரபு-06, மலையகத் தமிழ்ப் பண்பாட்டில் அர்ச்சுனன் தபசு (அ.ஜெகன்தாசன்), அண்ணாவியார் செபமாலை குழந்தையுடன் ஒரு நேர்காணல் (ஆசிரியர் குழு), கலைப்பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை: அஞ்சலியாக ஒரு குறிப்பு, (ஜீ.பீ.பேர்மினஸ்), நூல் நுகர்வு (அரங்கநேசன்), அரங்கியலில் புதிய நூல் வரவுகள்), புரிசை கண்ணப்ப தம்பிரானிடம் பெற்ற கற்கை நெறிமுறைகள் (கே.ஏ.குணசேகரன்), கால மாற்றமும் அரங்கத் தேவையும் (பிரான்சீஸ் அமல்ராஜ்), திருமறைக் கலாமன்றம் நடத்திய ஈழத்துக் கூத்து விழா: ஒரு பார்வை (தார்மீகி), நாட்டுக்கூத்தின் எதிர்காலமும் தேசிய அரங்கை நோக்கிய தேடலும் (யோ.யோண்சன் ராஜ்குமார்), அண்மைக்கால அரங்கப் பதிவுகள் (கி.செல்மர் எமில்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்