ஆசிரியர் குழு. யாழ்ப்பாணம்: நாடகப் பயிலகம், திருமறைக் கலாமன்றம், 238, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (யாழ்ப்பாணம்: ஜெயந்த் சென்டர், 28, மாட்டின் வீதி).
112 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 21×15 சமீ., ISSN: 1800-2730.
திருமறைக் கலாமன்றத்தினரின் நாடக அரங்கவியல் காலாண்டு இதழ். ஆசிரியர் குழுவில் யோ.யோண்சன் ராஜ்குமார், கி.செல்மர் எமில், வை.வைதேகி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். இவ்விதழில், அபிஞ்ஞான சாகுந்தலம்: நாடக பாடம் ஒரு பார்வை (வைதேகி செல்மர் எமில்), யாழ்ப்பாணக் கத்தோலிக்க நாட்டுக்கூத்து மரபு-11 (யோ.ஜோன்சன் ராஜ்குமார்), ”நாம் அனைவரும் அரங்கே”-ஒளகுஸ்தோ போல் நினைவாக (நீ.மரிய சேவியர் அடிகள்), விமர்சனம்: யாழ்.பல்கலைக்கழகத்தின் ஏழு நாடகங்களின் ஆற்றுகைகள்-சில கருத்துக்கள் (பா.இரகுபரன்), விமர்சனம்: காலத்தின் சோகத்திற்கு ஒத்தடம் கொடுத்த கல்வாரி யாகம் (அ.விமலேந்திரகுமார்), முருகையனின் நாடகவாக்க முயற்சிகள் (சத்திரிகா தர்மரட்ணம்), அரங்கியலில் புதிய நூல் வரவுகள், ”நாடகத்துறையில் இன்னும் நான் மாணவனே” -நாடகக் கலைஞர் ஜீ.பீ.பேர்மினஸ் உடன் ஒரு நேர்காணல் (ஆசிரியர் குழுவினர்), அரங்கப் பதிவுகள் (கி.செல்மர் எமில்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.