கஸ்வினி கணேசன், யோகராணி கணேசன். வவுனியா: கணேசன் பதிப்பகம், 221/2, நேரியகுளம் வீதி, புதையல்பிட்டி, நெளுக்குளம், 1வது பதிப்பு, பங்குனி 2021. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரின்டர்ஸ், சில்லாலை வீதி, பண்டத்தரிப்பு).
40 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-97692-0-5.
அவந்திக்காவின் பள்ளிநாள், வானிலாவின் மீட்புப்பணி, உதவி ஆகிய மூன்று சிறுவர் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இம்மூன்றுகதைகளுமே நோர்வே நாட்டின் சூழலுக்கேற்ப எழுதப்பட்டுள்ளன. இக்கதைகளில் பொருத்தமான இடங்களில் எமது தனித்துவமான தமிழர் பண்பாட்டு விழுமியங்கள் பற்றியும் பேசப்படுகின்றன. இக்கதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்கள் அன்றாட வாழ்வில் நோர்வேஜிய மொழியில் (நொஸ்க்) மாணவர்கள் பயன்படுத்தும் சொற்களுக்குரிய தமிழ்ச் சொற்களாக அமைந்திருப்பது மாணவர்கள் தமது தாய்மொழியில் சொல்வளத்தைப் பெருக்க வழிவகுப்பதாயுள்ளது. அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடத்தின் சிறப்பான அறுவடையாக அமையும் இந்நூல் மேற்படி கலைக்கூட மாணவி செல்வி. கஸ்வினி கணேசன் (தொய்யன் வளாகம், ஏழாம் வகுப்பு) அவர்களின் கைவண்ணத்தில், அவரது அன்னையின் மேற்பார்வையில் உருவாகியுள்ளது.