வ.செல்லையா. யாழ்ப்பாணம்: கீரிமலை யோகர் சுவாமிகள் மகளிர் தவநிலைய வெளியீடு, 1வது பதிப்பு, டிசம்பர் 1996. (கொழும்பு 12: ஸ்ரீசக்தி பிரிண்டிங் இன்டஸ்றீஸ்).
40 பக்கம், விலை: ரூபா 25.00, அளவு: 19×12.5 சமீ.
ஞானசிரோன்மணி வித்துவான் வ.செல்லையா எழுதிய சிறுவர் போதனைக் கதைகள். மூத்தோர் சொல் வார்த்தை அமுதம், நாட்டைக் காத்த சிறுவன், அனுபவமே நல்லாசிரியன், என்னாலே தான் எல்லாம் நடக்கும், அடாது செய்தவர் படாது படுவர், வேடம் தந்த பரிசு, உச்சித நற்கிரியை, ஏழை விதவையின் காணிக்கை, ஆலயம் தொழுவது சாலவும் நன்று, குற்றவாளிக்கு உதயமான ஞானம் ஆகிய தலைப்புகளில் பத்து கதைகள் இடம்பெற்றுள்ளன. கிழப்புறாவினதும் அரேபிய கடற் பிரயாணியினதும் அனுபவ முதிர்ச்சியும், ஒல்லாந்தச் சிறுவனின் நாட்டுப் பற்றும், ஆற்றங்கரைக் குடிசையில் வசித்த கிழவியின் கடவுள் பக்தியும் எமது சிறார்களின் உள்ளங்களில் பசுமரத்தாணிபோல் பதியும் வகையில் ஆசிரியர் கதைகளை எழுதியுள்ளார்.