இக்பால் அலி. கண்டி: மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், 18/13, பூரணவத்தை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2002. (கண்டி: பிரின்ட் எக்ஸ் கிராப்பிக்ஸ்).
28 பக்கம், விலை: ரூபா 35.00, அளவு: 18×12 சமீ., ISBN: 955-8335-02-9.
கவிஞர் இக்பால் அலியின் இந்நூல் சிறுவர்க்கான 5 கதைகளை உள்ளடக்குகின்றது. கதைகள் ஒவ்வொன்றும் ஏதொவொரு நற்சிந்தனையை சிறுவர் மனதில் விதைக்கின்றன. விடுதியில் அகதி மாணவர்கள் (ஒன்றுபட்டால் உலகை அறியலாம்), நல்ல மனிதர்கள் (பிறர் நலத்தால் ஒற்றுமை ஓங்கும்), விளையாட்டால் படித்த பாடம் (விளையாட்டாயினும் சீர்மை கொள்), உழைப்பாளி கியான் (சுட்ட புண் தடத்தை மற), வயலில் புல் பிடுங்கும் பெண்டுகள் (கூலியை சுரண்டி விடின் அழிவது பயிர்) ஆகிய ஐந்து தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.