16429 புதிய ஈசாப் கதைகள்-1.

செ.கணேசலிங்கன். சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 3(12), மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது  தெரு, வடபழநி, 1வது பதிப்பு, 2008. (சென்னை: சிவம்ஸ்).

47 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 30.00, அளவு: 22×15சமீ.

உலக உயிரினங்களில் மானிட இனமே உயர்ந்தது. விழிப்பு நிலை பெற்றது. சிறுவர்களுக்கு இன்றும் மிருகங்கள், பறவைகள் மூலம் ஒழுக்க நெறிகளைப் போதிக்க முயல்வது பிற்போக்கானது-உளவியல் சார்ந்ததல்ல என்று கூறும் ஆசிரியர், இரு தொகுதிகளாக வெளியிட்டுள்ள இந்நூலின் கதைகளில் மனிதர் மூலமே நீதிகளைக் கூறுகின்றார். முதலாவது தொகுதியில் 17 கதைகள் இடம்பெற்றுள்ளன. சுறுசுறுப்பானவன், பாம்பு பாம்பு, நாயும் எலும்புத் துண்டும், வாலை ஆட்டி வாழ்தல்?, நட்பு, ஆற்றில் கோடரி, வலை வீசாமல் மீன் கிடையாது, ஊர் வம்பு, மூளை இல்லாதவன், வாய்மை, கோவில் மணி, அழகான கால்கள், சுயபுத்தி இல்லாதவன், திருட்டும் தண்டனையும், தங்கக் கட்டியும் செங்கல்லும், பலசாலி யார்?, பணக்காரர் நட்பை நம்பாதே ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Best 78 No Wagering Casinos In 2024

Content Vulkan casino | Parimatch Casino No Deposit Bonus: Get 20 Spins That Are Free Without A Deposit No Deposit Bonuses For Existing Players Terms

14145 நல்லைக்குமரன் மலர் 1998.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2006. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம், 430, காங்கேசன்துறை வீதி). (12), 108 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,