16442 தமிழ் இலக்கியம் 10-11ஆம் ஆண்டு.

கல்வி வெளியீட்டுத் திணைக்களம். கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், இசுறுபாய, பத்தரமுல்ல, 13வது பதிப்பு, 1998, 1வது பதிப்பு, 1986. (இரத்மலானை: சர்வோதய விஸ்வலேகா அச்சகம், இல.41, லும்பினி அவெனியூ).

vii, 171 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

10ஆம் 11ஆம் ஆண்டு மாணவர்களுக்கான இந்நூலில் ஒவ்வொரு பாடத்தின் இறுதியிலும் வினாக்கள் சேர்க்கப்பட்டு மறுபதிப்புச் செய்யப்பட்டள்ளது. புகழ்பெற்றபுலவர்களும் எழுத்தாளர்களும் ஆக்கியுள்ள செய்யுள்களிலும் உரைநடைகளிலுமிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. கம்பராமாயணக் காட்சிகள் (அவையடக்கம், சிறப்புப் பாயிரம், கம்பன் அபர பிரமன், ஆறு, குலஞ் சுரக்கும் ஒழுக்கம்), நளவெண்பா (சுயம்வர காண்டம்), இஸ்லாமியக் கலையும் பண்பும், நாலடியார், மாதரும் மலர்ப் பொய்கையும், ஆசாரக் கோவை, சிரிக்கத் தெரிந்த பாரசீகர், பெரிய புராணம், கர்ணனும் கும்பகர்ணனும், இலங்கை வளம், கலையின் விளக்கம், சீறாப்புராணம்-நபி அவதாரப் படலம், நீதிக்கும் பின் பாசம், கங்கையில் விடுத்த ஓலை, ஒன்றுக்கு ஆயிரம் ஆயிரம், செய்னம்பு நாச்சியார் மான்மியம், நன்றிப் பெருக்கு ஆகிய 17 பாடங்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்