நா.ஆண்டியப்பன் (மலராசிரியர்). சிங்கப்பூர் 969547: சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், இல.182, Cecil Street , 04-10, TAPAC, 1வது பதிப்பு, ஓக்டோபர் 2011. (சிங்கப்பூர்: Percetakan Halus Sdn.Bhd).
xiv, 266 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், 2011ஆம் ஆண்டில் ஒக்டோபர் 28-30ஆம் திகதிகளில் நடாத்தி முடித்த உலகத் தமிழ் எழுத்தாளர் மாநாட்டு மலர் இது. ‘முனைவர் கா.சிவத்தம்பியின் ஈழத்தில் தமிழ் இலக்கியம்” என்ற தலைப்பில் இராம கண்ணபிரான் (சிங்கப்பூர்) அவர்களின் கட்டுரையும், ‘கெட்ட போரிடும் உலகத்தை வேரொடும் சாய்ப்போம்” என்ற தலைப்பில் கம்பவாரிதி ஜெயராஜ் (இலங்கை) அவர்களின் கட்டுரையும், ஈழத்தவர்கள் தொடர்பான ஆக்கங்களாக இடம்பெற்றுள்ளன. மலர்க்குழுவில் சுப.அருணாசலம், சித்ரா ரமேஷ், பொன் சுந்தரராசு, செ.ப.பன்னீர்செல்வம் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். நிரல் குழுவில் (Conference Content Committee) அருண் மகிழ்நன், முனைவர் சேரன் உருத்திரமூர்த்தி, நாகலட்சுமி சிவசம்பு, மாலன், முனைவர் ரெ.கார்த்திகேசு, இராம கண்ணபிரான், நாராயணன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.