ஏ.சீ.அப்துல் றகுமான். ஏறாவூர்: ஹனிமூன் பதிப்பகம், 1வது பதிப்பு, 2021. (ஏறாவூர்: ஹிரா அச்சகம்).
viii, 134 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 300., அளவு: 22×16 சமீ., ISBN: 978-624-97405-0-1.
1965 முதல் ”புதுக்கடை றகுமான்” என்ற புனைபெயரிலும், இயற்பெயரிலும் எழுதிவரும் கலாபூஷணம் ஏ.சீ.அப்துல் றகுமான் அவர்களின் மூன்றாவது நூலாக இக்கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது. முன்னர் 2019இல் “கூடிழந்த குருவிகள்” என்ற சிறுகதைத் தொகுதியையும், ”மாறாத் துயரம்” என்ற குறுங்காவியத்தையும் வழங்கியிருந்தவர். இக்கவிதைகளின் உள்ளடக்கங்கள் விழிப்புணர்வூட்டுவதாயும், சமூக அவலங்களை வெளிக்காட்டும் கண்ணாடியாகவும் அமைந்துள்ளன. இதில் அடங்கியுள்ள பல கவிதைகள் பிரதேச, மாவட்ட கலை இலக்கியப் போட்டிகளில் முதலிடம் பெற்றவையாகும்.