எஸ்.நளீமுதீன். கல்முனை: ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேஷன், 115 A, மதரசா வீதி, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
x, 97 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 23×15.5 சமீ., ISBN: 978-624-6257-00-2.
இக்கவிதைகள் சமகாலத்தில் எம்மிடையே வாழ்ந்த ஒரு முஸ்லிம் அரசியல் ஆளுமையான ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவையாகும். கல்முனைப் பட்டினம், பிறப்பு, ஆரம்பக் கல்வி, இடைநிலைக் கல்வி, சட்டக் கல்லூரி, அரசியல் ஆர்வம், திருமணம், அரசியல் பிரவேசம், சட்டத்தரணி, பாராளுமன்றத் தேர்தல் 1970, தேர்தல் வெற்றி 1977, தேர்தல் வெற்றி, கன்னி உரை, வடக்கின் பச்சை, ஐ.நா.சபையில், 1982 தேர்தல், 1983 கறுப்பு ஜூலை, பயங்கரவாதம், முஸ்லிம் அரசியல், 1988 ஜனாதிபதி தேர்தல், அமைச்சர் மன்சூர், இறுதித் தேர்தல் 1994, அழிந்தது அரசியல் கலாசாரம், 94க்குப் பின், இன்றைய அரசியல், 25-07-2017, முடிவல்ல ஆரம்பம் ஆகிய 27 தலைப்புகளில் ஏ.ஆர்.மன்சூர் அவர்களின் அரசியல் வாழ்வின் சில பக்கங்கள் கவிதைவடிவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.