16465 அரிமா நோக்கு: புதுக்கவிதை.

ஐயாத்துரை பிரபு. யாழ்ப்பாணம்: பிரதேச கலாசாரப் பேரவை, வடமராட்சி கிழக்கு, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2021. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).

x, 65 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×12.5 சமீ., ISBN: 978-624-97770-0-2.

ஈழத்து இலக்கிய உலகில் ஒரு படைப்பாளியாகத் தன் முதல் தடத்தைப் பதிக்கும் ஐயாத்துரை பிரபு தனது எழுத்துக்களில் உத்வேகமும், ஞானமும், தான் வாழும் சமூகத்தின் மீதான கரிசனையும் கொண்டவர். இயற்கை, கல்வி, நட்பு, நன்றிக்கடன், ஏமாற்றம், அமைதி, பெற்றோர்; பாசம் போன்ற கருப்பொருள்களில் தனது கவிதைகளை யாத்திருக்கிறார். சமூகம் சார்ந்த இவரது விரிந்த பார்வையை இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் வெளிப்படுத்தியுள்ளன. வடமராட்சி கிழக்கு, ஆழியவளை, உடுத்துறை வடக்கில் வேம்படியைச் சேர்ந்த இக்கவிஞர் தாயகத்தின்மீது கொண்ட பற்றாலும் தமிழ்ச் சமூகத்தின் மீது கொண்ட பாசத்தாலும் தான் வாழ்கின்ற சூழலின் தான் அனுபவித்த அனுபவ வெளிப்பாட்டை கவிதைகளாக வடித்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்.

ஏனைய பதிவுகள்

14410 பேச்சுச் சிங்களம் (Bahashana Sinhala Mattama 3).

எஸ்.ஜே.யோகராஜா, டயனா குமாரி இத்தமல்கொட. ராஜகிரிய: அரசகரும மொழிகள் திணைக்களம், பாஷா மந்திரய, கோட்டே வீதி, 3ஆவது பதிப்பு, 2019, 1வது பதிப்பு, 2008, 2வது பதிப்பு, 2012. (கொழும்பு: அரச பதிப்பகத் திணைக்களம்).