16474 இப் பிறவிச் சாலை.

அனுராதா. கொழும்பு 6: ஸ்ரீநிதி பதிப்பகம், 42/11, முதல் மாடி, சுவி சுத்தாராம வீதி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2017. (சென்னை 14: சீனிவாசா ஆப்செட்).

96 பக்கம், சித்திரம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 23×15 சமீ.

திருமதி அனுராதா ஒரு தமிழ் இலக்கிய ஆர்வலர். இல்பான உந்துதல் காரணமாக தமிழில் தனது உணர்வுகளை எழுத்துருவாக்கி வருபவர். சிவஸ்ரீ கி.சோமசுந்தரக் குருக்கள்-இராஜேஸ்வரி அம்மாள் தம்பதிகளின் இரண்டாவது புதல்வியான அனுராதா தனது முதலாவது கவிதைத் தொகுதியை ‘எல்லையற்ற வான்வெளியில்” என்ற தலைப்பில் 2016இல் வெளியிட்டவர். இது இவரது 2ஆவது கவிதைத் தொகுப்பாகும். இதில் இப்பிறவிச் சாலை, எழுநிலை வாழ்வு, ஈசனின் தியானம், சகியடைய வருக, மௌனம், அகப்பை, எண்ணப்பறவை, கனவே நல்லது, தேடல், ஞான நதி, சிறுத்தை வேதம், சொந்த நூல், முப்பருவம், பச்சைப் பாடம், காடு, தீக்குருத்து, நாளை, காளான்கள், நீலோற்பலம், பொது நலம், அன்பின் அலைகள், சூரியன், தண்மதி, ஒளி, சுற்றம், என்ன மாயம், பொழுதுகள், இயற்கைப் பயணம், அந்த மாங்காய், நினைவு, அறுவடை, நீளம், காதல் தெரியாக் காலம், நீயெனும் இவளே, சருகு, செக்கு மாடு, மனங்களின் கோரிக்கை, திரி, புலன்(ம்) பெயர்வு, படிக்கல், திருச்சிலை, முதுமை, அருள் விற்பனை, நம்பிக்கை, தணியவைப்பாய் தணணீர்த் தோழி, வேண்டுகோள், அட்சய திருதியை, நான் உலகம், நான் ஒரு மேசைக் கணனி, அம்மா ஆகிய 50 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

16012 நூலகவியல் பெருந்தொகுப்பு: தொகுதி 1-7: செப்டெம்பர் 1985-ஏப்ரல் 2007.

என்.செல்வராஜா (ஆசிரியர்). ஐக்கிய இராச்சியம்: அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம்,