16482 ஈழவள நாட்டிற் பயிர் பெருக்க வாரீர்.

J.S.K.A.A.H. மௌலானா. கொழும்பு 2: ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை-இலங்கைக் கிளை, 9/A, பராக்; ஒழுங்கை, 2வது பதிப்பு, 2014, 1வது பதிப்பு, 1967. (அச்சக விபரம் தரப்படவில்லை).

24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12 சமீ., ISBN: 978-955-4986-00-8.

இலங்கை சாகித்திய மண்டலத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைக் கோவை. 28.10.1967 அன்று கொழும்பு ரோயல் கல்லூரி மண்டபத்தில் இலங்கை சாகித்திய மண்டலக் கவிதைக்குழு நடாத்திய கவியரங்கு நிகழ்ச்சியில் நவாலியூர் சோ.நடராசா அவர்களின் தலைமையில் அரங்கேற்றப்பட்டது. காவடிச் சிந்து, வழிநடைச் சிந்து, என்னும் கிராமியப் பாடல் வகையில் அமையப்பெற்ற இப்பாக்கள் பாடி மகிழ மிக்க சுவை தருவதாகும். கவிஞர் இந்நூலில் தேசியப்பற்று, நாட்டுவளம், சமூக ஒற்றுமை என்ற பொருளினைப் பெரிதும் கையாள்கின்றார்.

ஏனைய பதிவுகள்

13120 இந்து சமய பாடம்.

க.சொக்கலிங்கம் (புனைபெயர்: சொக்கன்). யாழ்ப்பாணம்: ஸ்ரீலங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1979. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், 50, கண்டி வீதி). (8), 221 பக்கம், விலை: ரூபா 8.50, அளவு: