S.T. திஸ்னுகன். யாழ்ப்பாணம்: S.T.திஸ்னுகன், விழிசுட்டி, சங்கானை, 1வது பதிப்பு, மார்ச் 2018. (யாழ்ப்பாணம்: சாய்ராம் பிரின்டர்ஸ், பிரதான வீதி, சங்கானை).
iv, 99 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., ISBN: 978-955-38909-0-0.
‘வாசிப்பும் தேடலும் படைப்பாக்க சிந்தனைக்கான திவுகோல். இத்திறவுகோல் கற்பனாபூர்வமான சமூக நேசிப்புள்ள மனிதர்களை உருவாக்குகின்றது. இப்பின்னணியில் நடிகன், இயக்குநர், எழுத்தாளர் என பல துறைகளில் சாதனை படைத்து வருகின்ற இளம் படைப்பாளியாக தி.திஸ்னுகன் விளங்குகின்றார். தேடல், தலைமைத்துவம், பலரையும் இணைத்து குறித்த விடயத்தை ஆற்றி முடிக்கின்ற பண்பு என்பன இவரது திறன்கள். உயிரியல் பிரிவில் கல்வி பயிலும் இவர் முதன்மையான ஆற்றுகையாளனாக புத்தாக்க அரங்க இயக்கம் மேற்கொண்ட தெருவெளி ஆற்றுகைகளில் பங்குபற்றி பலரதும் பாராட்டுக்களைப் பெற்றவர். வாசிப்பில் பற்றுக்கொண்ட இவர் எழுத்து முயற்சியில் தனது உணர்வு வேட்கையினை வெளிப்படுத்திக் கொள்வதற்காக கையாண்ட ஊடகமான கவிதைத் துறையின் ஊடாக உளறல்கள் என்னும் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்” (எஸ்.ரி.அருள்குமரன், பின்னட்டைக் குறிப்பு). (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26853).