16486 உன் மொழியில் தழைக்கிறேன்.

மருதமுனை ஹரீஷா (இயற்பெயர்: எம்.ஏ.சி.ஹரீஷா). கல்முனை: தென்கிழக்கு அஷ்ரப் சமூக சேவைகள் நிறுவனம், SEASS Organisation 1வது பதிப்பு, ஜீலை 2016. (சாய்ந்தமருது: எக்செலன்ட் பிரின்ட்).

(16), 64 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×16 சமீ., ISBN: 978-955-43104-0-7.

மருதமுனை ஹரீஷாவின் கவிதைகளின் தொகுப்பு. கவிதைகளில் தான் வாழும் சமூகக் கண்ணோட்டம், பெண்ணியப் பார்வைகள் யதார்த்தமாகத் தொட்டுச் செல்கின்றன. கவிதைகள் தென்கிழக்கு இஸ்லாமியத் தமிழ்ப் பேச்சு வழக்கில் அமைந்துள்ளமை இத்தொகுப்பிற்குச் சிறப்பாகும். 1999இல் எழுத்துத்துறையில் பிரவேசித்த ஹரீஷாவின் கவிதை, சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள் என தேர்ந்த பல பிரதிகளும் இலங்கையில் வெளியாகும் பிரதான பத்திரிகைகளான தினகரன், வீரகேசரி, சுடர் ஒளி, தினக்கதிர், இடி, நவமணி, முஸ்லிம் குரல் என்பனவற்றின் ஊடாகப் பிரசுரமாகியிருக்கின்றன. மருதமுனை ஹரீஷா, நவஹரீஷா, மருதாணி ஆகிய புனைபெயர்களிலும் இவர் எழுதிவருபவர். ஒரு நூலகராகப் பணியாற்றும் ஹரீஷாவுக்கு நாளாந்த வாழ்க்கை நூல்களோடு உறவாடும் பெறுமதியான ஒரு பொழுதாகக் கழிந்துள்ளது. இவரது பெற்றோர் பி.எம்.எம்.ஏ.காதர்- எம்.எல்.ஹவ்லத் தம்பதியினராவர். இவரது தந்தையும் மூத்த ஊடகவியலாளராகவும், கவிஞராகவும் அறியப்பட்டவர். இவரது துணைவர் கல்முனை சமீம் ஒரு ஊடகவியலாளராகவும் இலக்கிய ஆர்வலராகவும் அறியப்பட்டவர்.

ஏனைய பதிவுகள்