கருணாகரன். சென்னை 600 042: யாவரும் பப்ளிஷர்ஸ், 24, Shop No B, S.G.P. Naidu Complex, தண்டீஸ்வரம் பஸ் தரிப்பு, பாரதியார் பூங்காவுக்கு எதிராக, வேளச்சேரி பிரதான சாலை, 1வது பதிப்பு, பெப்ரவரி 2021. (சென்னை 600 042: யாவரும் பதிப்பகம்)
90 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21.5×14.5 சமீ.
‘எதெல்லாம் நடக்கக்கூடாது என்றாலும் அதெல்லாம் நடந்து விடுகிறது. அப்படித்தான் ஈழப்போராட்டமும். அதனுடைய கனவும், விடுதலை பற்றிய கனவை விதைத்து விட்டுப் பார்த்தால் புதர்களும் முட்புதர்களுமாகவே விளைந்தது நிலம். விளைந்த நிலமோ கொலைக்களமானது. ஒடுக்குமுறைக்கு எதிரான பயணம் அப்படியே நேரெதிராகத் திரும்பி ஒடுக்குமுறையாகியது. விடுதலைக்கான நடையும் அப்படித்தான். எதிர்நிலையானது. எல்லாமே நேர்-எதிர், எதிர்-நேர் என மாறிமாறிக் குழப்பமாகியது. இன்னும் இந்தக் குழப்பம் தீரவில்லை. அப்படித்தான் நானும் நீங்களும் நம் காலமுமானது. இது மத்தியூவின் காலம். சரியாகச் சொன்னால், மத்தியூவை உருவாக்கியதே இந்தக் காலம் தான். இந்தக் காலத்தில் நிகழ்ந்தவை, நிகழ்த்தப்பட்டவை நிகழ மறுத்தவை எல்லாம் தான் இந்தக் கவிதைகள்” (கருணாகரன், பின்னட்டைக் குறிப்பு)