கெகிறாவ ஸஹானா. கெகிறாவை: கெகிறாவ ஸஹானா, 1வது பதிப்பு, 2014. (அனுராதபுரம்: வடமத்திய மாகாணசபை அச்சகம்).
x, 65 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×16 சமீ., ISBN: 978-955-53260-2-5.
கெகிறாவ ஸஹானா தன் ஆரம்பக் கல்வியை கெகிறாவ முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும், உயர்தரக் கல்வியை கம்பளை ஸாஹிறாக் கல்லூரியிலும் கற்ற பின்னர், ஆங்கில மொழி ஆசிரியர் போட்டிப் பரீட்சையில் சித்தியெய்தி 1991 இல் பதவியேற்று, இருபது வருடங்களுக்கு மேலாக சேவையாற்றியபின் தற்போது சுயவிருப்பின் பேரில் ஓய்வு பெற்றிருக்கின்றார். இதில் இவரது 11 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அங்கும் இங்கும், மீளுதல், ஊமையின் பாஷை, நா ஸ்கொலர்ஷிப் எழுதுகிறேன், ஸ்கூல் பாக், ஏதும் பேசவில்லை, தாயும் தந்தையுமானவர்கள், வாப்பாவுக்கு ஒரு கட்டில், எங்கட பள்ளி எது உம்மா?, குர்பானி, தங்கச் சங்கிலி ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.