ராஜரட்ணம் ருக்ஷான். ஹப்புத்தளை: நெம்புகோல் பதிப்பகம், நா செவன, வல்ஹப்புதென்ன, ஹல்தும்முல்ல, 1வது பதிப்பு, நவம்பர் 2022. (சென்னை 600 117: ஸ்ரீதுர்கா பிரின்டர்ஸ், 4ஏ, பூபதி நகர், கீழ்க்கட்டளை).
xxii, 232 பக்கம், விலை: ரூபா 1000., இந்திய ரூபா 260., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-624-6336-00-4.
தி.ஞானசேகரனின் ‘எரிமலை” நாவல் எந்தளவு தூரம் இலங்கையின் இன மோதல் வரலாற்றின் அடிப்படைகளை எடுத்துரைக்கிறது என்பதை ஆராய்வதே இந்நூலின் நோக்கமாகும். கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் தமிழ்ப் பட்டயக் கற்கை நெறியினைப் பூர்த்தி செய்வதன் பொருட்டு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையின் திருத்தி வடிவம் இதுவாகும். இவ்வாய்வு, தோற்றுவாய், நாவலிலக்கியமும் ஈழத்துத் தமிழ் நாவல்களும்: பொதுவான எண்ணக்கருக்கள், ஈழத்தில் இனமோதுகையின் வரலாற்றுப் பின்புலம், ஈழத்துத் தமிழ் அரசியல் நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும், எரிமலை நாவலில் வெளிப்படும் இன மோதல் பற்றிய அரசியற் பிரச்சினைகள், எரிமலை எடுத்துரைக்கும் அரசியற் தீர்வு பற்றிய விவாதங்கள், எரிமலை நாவலின் புனைகதைத் திறன், நிறைவுரை ஆகிய எட்டு இயல்களைக் கொண்டமைந்துள்ளது. பின்னிணைப்பில் இனமோதுகையை அடிப்படையாகக் கொண்டெழுந்த ஈழத்துத் தமிழ் அரசியல் நாவல்கள் சிலவற்றின் பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது.