17629 அரண்: சிறுகதைத் தொகுப்பு

த.கலாமணி. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2022. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

100 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-624-5881-65-9.

இது ஜீவநதி வெளியீட்டகத்தின் 246ஆவது நூலாக வெளிவந்துள்ளது. த.கலாமணியின நான்காவது சிறுகதைத் தொகுதி இது. இன்னும் வரக்காணனே, குலக்கொழுந்து, தோழமை, அரண், காரணன், பேராண்மை, வைதேகி, அம்மாவின் பட்டுச்சேலை, அவா, தீதும் நன்றும் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட பத்து சிறுகதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. த.கலாமணியின் சிறுகதைகளுக்குள் உட்பொதிந்திருக்கும் உளவியல அம்சங்கள் குறிப்பிடத்தக்கன. குழந்தை உளவியல், முதுமை உளவியல், காதல் உளவியல் என இவரது கதைகளில் உளவியல் அம்சங்கள் மிகுந்து காணப்படுகின்றன. முன்னர் இவர் எழுதியிருந்த ‘பாலித்திட வேண்டுமம்மா’ என்ற தலைப்பிலான கவிதை எட்டாம் ஆண்டு தமிழ் பாடப் புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய பதிவுகள்

10731 அவளது கூரையின்மீது நிலா ஒளிருகிறது: மூன்று குறுநாவல்கள்.

வ.ஐ.ச.ஜெயபாலன். சென்னை 600018: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை 600005: மணி ஓப்செட்ஸ்). 168 பக்கம், விலை:  இந்திய ரூபா 100., அளவு: 21.5×14

16924 அருளானந்தம் கேணிப்பித்தன் : வாழும்போதே வாழ்த்துவோம்.

பால.சுகுமார். மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், இல. 90, பார் வீதி, இணை வெளியீடு, மட்டக்களப்பு: அனாமிகா வெளியீட்டகம், இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, டிசம்பர் 2021. (மட்டக்களப்பு:  வணசிங்க