ஆ.கதிர்காமத்தம்பி. யாழ்ப்பாணம்: சைவ கலை பண்பாட்டுப் பெரவை, சந்நிதியான் அச்சிரமம், வல்வெட்டி, 1வது பதிப்பு, ஆனி 2006. (வல்வெட்டி: சந்நிதியான் ஆச்சிரமம்).
xiv, 68 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
பயிற்றப்பட்ட தமிழாசிரியையாகப் பணியாற்றி மறைந்த தன் வாழ்க்கைத் துணைவியார் மாதேவிப்பிள்ளை கதிர்காமத்தம்பியின் (01.05.1930-13.6.2005) மறைவின் நினைவுமலராக இந்நூலை வல்வெட்டி சிவ கவிமாமணி கவிஞர் ஆ.கதிர்காமத்தம்பி அவர்கள் வெளியிட்டுள்ளார். பதிமுதுநிலை, உயிரவை நிலை, இருள்மல நிலை, அருளது நிலை, அருளுறு நிலை, அறியும் நெறி, உயிர் விளக்கம், இன்புறுநிலை, ஐந்தெழுத்தருள்நிலை, இறைவனை அணைந்தோர் தன்மை ஆகிய பத்து அதிகாரங்களைக்கொண்ட இந்நூல் வசனரூபச் சுருக்கம், திருவருட்பயன் வசனரூபத்தின் பூர்த்தி, ஆகிய அத்தியாயங்களையும் மேலதிகமாகக் கொண்டது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 170838).