வே. குமாரவேல். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்).
xiv, 186 பக்கம், விலை: இந்திய ரூபா 50., அளவு: 17.5×12 சமீ.
கர்மயோகம் என்ற நூலை 2003இல் எழுதிய நூலாசிரியரின் மற்றொரு படைப்பு இது. பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள பக்தியோகக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இறைவனைப் பற்றிய தெளிவான ஞானமும் நமக்கும் இறைவனுக்கும் உள்ள உறவும் அவரை நாம் எப்படி நெருங்கலாம் அவரது சக்தி எப்படிப்பட்டது என்பன போன்ற இன்னோரன்ன விடயங்களையும் இந்நூலில் எளிய நடையில் ஆசிரியர் தெரிவிக்கின்றார்.