தி.ஞானசேகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (மகரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன).
xxvi, 950 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 1800., அளவு: 25.5×18 சமீ., ISBN: 978-955-8354-48-3.
06.06.2000 அன்று தனது முதலாவது இதழை வெளியிட்டுவைத்த ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் 175ஆவது இதழ் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழாக 976 பக்கங்களில் வெளிவந்துள்ளது. தாயகத்திலும் புகலிடத்திலும் வாழும் படைப்பாளிகளை எவ்வித வேறுபாடுகளுமின்றி அரவணைத்துப் பயணிக்கும் இச்சஞ்சிகையின் 175ஆவது இதழில், ஈழத்தமிழரின் புலம்பெயர் வாழ்வியலைப் பிரதிநிதித்துவப்படுத்தும், பதிவுசெய்யும் 50 கட்டுரைகள், 127 கவிதைகள், 85 சிறுகதைகள், 22 ஓவியங்கள் என்பன இடம்பெற்றுள்ளன. இந்நூலின் இறுதியில் என்.செல்வராஜா எழுதிய ஈழத்தமிழரின் புலப்பெயர்வு இலக்கியச் செல்நெறியின் சில தடப் பதிவுகள் என்ற சிறப்புக் கட்டுரை (பக்.909-928) இடம்பெற்றுள்ளது.