க.சண்முகரத்தினம். கொழும்பு 15: க.சண்முகரத்தினம், 1/27, பாம் வீதி, மட்டக்குளி, 1வது பதிப்பு, ஜனவரி 2011. (கொழும்பு 12: வக்மி அச்சகம், 258/3, டாம் வீதி).
viii, 81 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-53178-0-1.
ஆசிரியர் தன் மதப்பற்றுக்கு உட்படாத ஆன்மீக நாட்டத்தில் எழுதிய அனுபவப் பதிவுகள் இவை. இதனை இலக்கிய வகையறாக்கள் என்ற வடிவத்துக்குள் அடக்கமுனைந்தால் ஏமாற்றமே மிஞ்சும். இதில் கற்பனை இல்லை. ஆசிரியரின் ஆன்மீக நாட்டத்தின் அனுபவக் குறிப்பேடாக இது அமைந்துள்ளது. நான் ஒரு பைத்தியக்காரக் கடவுள், வழக்கு, பிரார்த்தனை, என்ன தீர்ப்பு, வேட்டை, விழிப்பு, அவள் ஒரு அழகிய குழந்தை, உதவி, மாயை, அவள் மாயை அல்ல, சீடன் எங்கே, அந்த மணியை அடிக்காதீர்கள், மாளிகை, அந்த விண்கலம், காதல், ஞானம், சிலை, அன்பு, கடவுள், தர்மம், எண்ணங்கள், விடுதலை உணர்வு, துணைவிக்கு ஆகிய 23 தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 219401).