டேவிட் வி. பற்றிக். யாழ்ப்பாணம்: அமலமரித் தியாகிகள் வெளியீடு, யாழ்ப்பாண மாகாணம், 1வது பதிப்பு, மே 2005. (கொழும்பு 14: ட்ரான்ஸென்ட் பிரின்டர்ஸ்).
63 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 75., அளவு: 21×14 சமீ.
மானிடத்தின் இயற்கை மனப்போக்கு, அதனை எவ்விதம் நெறிப்படுத்தினால் மானிடம் வெல்லும், அன்பு ஆட்சி செய்ய வழிபிறக்கும் என்று நூலாசிரியர், பல்வேறு மனோதத்துவக் கோட்பாடுகளின் கண்ணோட்டத்தில் இந்நூலில் ஆராய்ந்து கூறியுள்ளார். மானிட வாழ்வின் நெறிமுறைகளையும் பருவப்படிமுறைகளையும் கருத்திற்கொண்டு இவ்வாய்வை மேற்கொண்டுள்ளார். அழகு தமிழில் பல்வறு மனோதத்துவ அறிஞர்களின் மேற்கோள்களுடனும் எடுத்துக்காட்டுகளுடனும் தனது படைப்பை விரிவாக்கியுள்ளார். ஆசிரியர் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலயத்தின் குருவானவராக மன்னார் பிரதேசத்தில் பணியாற்றியவர். வி.பி., வின்சன்ற் பற்றிக் ஆகிய பிற பெயர்களிலும் எழுதிவருபவர். உள்ளத்தின் உணர்வலைகள், உங்களால் ஆகுமே, நீங்கள் நீங்களாகவே இருங்கள், உள்ளகச் சக்தியை அதிகரியுங்கள், ஆற்றுப்படுத்தல் வரலாற்றுப்பார்வை, உள்ளதை உள்ளவாறே பேசுங்கள், நல்லோராய் வாழுங்கள், முயலுங்கள் முன்னேறுங்கள், கொடுத்துக்கொண்டே இருங்கள், மன்னித்து இன்புறுங்கள் ஆகிய பத்து தலைப்புகளில் மானிட மேம்பாட்டுக் கட்டுரைகளாக இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 180042).