குமாரசாமி சோமசுந்தரம். தெகிவளை: ரஜி வெளியீடு, 16, 6/2, வண்டவேர்ட் பிளேஸ், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2010. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
viii, 216 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-51144-3-1.
வாசகர்களிடையே அறிவு, திறன், மனப்பாங்கு, ஒழுக்கம் என்பவற்றில் நல்ல நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட மனித விழுமியங்கள் நூல் வரிசையில் ஆசிரியரின் ஐந்தாவது நூல் இதுவாகும். உயர்திணையில் மனிதர்கள், ஒப்புரவு எனும் மனித விழுமியம், நற்பழக்க வழக்கங்கள், சொன்னசொல் தவறாமை, நன்மக்கட்பேறு எனும் அறம், அமைதிக்குப் பகை வெறுப்புணர்வு, நேரமுகாமைத்துவம் என இன்னோரன்ன தலைப்புகளில் இக்கட்டுரைகள் விரிகின்றன. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் வானொலியில் இவை வாரம்தோறும் வாசிக்கப்பட்டவை. அத்துடன் ஞாயிறுதோறும் தினக்குரல் பத்திரிகையிலும் எழுத்துருவில் பிரசுரமானவை. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 218031).