9093 இறந்தபின் எங்கு செல்கின்றோம்?

அ.குமரகுரு. யாழ்ப்பாணம்: அ.குமரகுரு, 1வது பதிப்பு, 1990. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில்).

vi, 78 பக்கம், விலை: ரூபா 18., அளவு: 18×12.5 சமீ.

இந்த தூல உடலைவிட்டு உயிர் பிரிவதையே நாங்கள் மரணம் அல்லது இறப்பு எனக் கூறுகின்றோம். தூல உடலை விட்டுப் பிரியும் உயிர் நல்வினை தீவினை முதலியன தொடர்ந்து நிற்கும் சூக்குமஉடல் காரண உடல் ஆகிய இரண்டினையும் கூட்டிக்கொண்டே செல்கின்றது. தனது நல்வினை தீவினைக்கேற்ப இன்ப-துன்ப அனுபவங்களை அனுபவித்தபிறகு மறுபடியும் இந்த நிலவுலகிற்கே வருகிறது என்று கூறும் சைவ சித்தாந்த கருத்துக்களை இந்நூல் விரிவாக ஆராய்கின்றது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 84753).

ஏனைய பதிவுகள்