சிவதொண்டன். யாழ்ப்பாணம்: சிவதொண்டன் சபை, 434, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு 11: அஷ்டலட்சுமி பதிப்பகம், 320, செட்டியார் தெரு).
vii, 90 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21.5×15 சமீ. சைவசித்தாந்தத்தை பொதுவகையாகக் கூறும் காமிகம் முதல் வாதுளம் ஈறாகிய 28 ஆகமங்களையும் ஸ்ரீகண்ட பரமேசுவரன் இருடிகளுக்கும் முனிவர்களுக்கும் உபதேசித்ததாகவும், சருவ ஆகமங்களின் சாரத்தைச் சிறப்பாக எடுத்துக்கூறும் சாருவஞானோத்தர ஆகமத்தை சீகண்டநாயனார் முருகனுக்கு உபதேசித்ததாகவும் கர்ணபரம்பரைக் கதையுண்டு. கடவுளுக்கே உபதேசித்த பெருமைமிக்க இவ்வாகமத்தைக் கூறும் நூல் இது. சுத்தாத்துவித சைவசித்தாந்த சமயத்தின் இக்காலநிலையைச் சிந்தித்துச் சமகாலத்தின் தேவைக்கேற்றபடி தமிழ்மூலமான உரையை இந்நூல் கொண்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 123996).