சி.கணபதிப்பிள்ளை. உரும்பிராய்: பண்டிதமணி நூல்வெளியீட்டுச் சபை, உரும்பிராய் மேற்கு, 1வது பதிப்பு, ஜுலை 2007. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரிண்டர்ஸ், பலாலி வீதி).
x, 127 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ.
இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.க. அவர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தலைமைத் தமிழ் விரிவுரையாளராக இருந்தவர். ஆசிரிய, மாணவர்களோடு- சாதாரண பாடசாலை மாணவர்களோடு கற்பித்தல் வழிகளில் ஈடுபட்டு உழைத்தவர். பாஷை, இலக்கணம், இலக்கியம் என்ற துறைகள் பற்றிய தமது கருத்துக்களை பேச்சு, கட்டுரை வழியாக ஏற்கெனவே பதிவுசெய்துள்ளவர். அவரது பார்வையில் திருவருட்பயனுக்கு இந்நூலில் உரைவழங்கியிருக்கிறார்.