வாகரைவாணன். மானிப்பாய்: வாகரைவாணன், பழனம், உடுவில் தெற்கு, உடுவில், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1991. (யாழ்ப்பாணம்: புனித வளன் கத்தோலிக்க அச்சகம்).
(4), 30 பக்கம், விலை: ரூபா 25., அளவு 18×12.5 சமீ.
கிறிஸ்துவின் போதனைகள், தத்துவங்கள் நம் வாழ்விற்கு இன்றியமையாதன. கிறிஸ்துவின் தத்துவங்களை புதுக்கவிதை வடிவில் மனதில் படியக்கூடிய வகையில் கவிஞர் வாகரைவாணன் இயற்றியிருக்கிறார். அவதாரம், மறைந்த வாழ்வு, போதனை, மரணம், உயிர்ப்பு என்னும் பகுதிகளைக்கொண்ட யேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை எளிய நடையில் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வகையில் கவிதையாக்கித் தந்திருக்கிறார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 86661).