எஸ்.ஏ.ஐ.மத்தியு. மட்டக்களப்பு: அருட்சகோதரர் கலாநிதி எஸ்.ஏ.ஐ.மத்தியு, ஓய்வுபெற்ற வலயக் கல்வி இயக்குநர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2001. (மட்டக்களப்பு: சென்.ஜோசப் கத்தோலிக்க அச்சகம்).
94 பக்கம், வரைபடம், விலை: ரூபா 150., அளவு: 22×14.5 சமீ.
இந்நூலானது மறையினை அறிவோம் அறிவிப்போம் எனும் சிறந்த நோக்கில் க.பொ.த. உயர்தர மாணவர்களின் கிறிஸ்தவ பாடநெறியை இலகுவாக்கி, ஒரு முழுமையான ஆன்மிக அனுபவம் அளிக்க மேற்கொள்ளப்பட்ட சிறந்த முயற்சியாகும். இங்கு விவிலிய ஞானம் உண்டு. திருச்சபையின் பாரம்பரியப் படிப்பினைகள் உண்டு. இறையியல் கூர்மை உண்டு. இரண்டாம் வத்திக்கான் சங்கப் போதனைகள் உண்டு. நூலாசிரியர் அருட்சகோதரர் கலாநிதி எஸ்.ஏ.ஐ.மத்தியு ஏழாண்டுகள் ஆசிரியராகவும், 22 ஆண்டுகள் அதிபராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 132198).